ஈரோட்டில் அரசு ஊழியர்களின் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை.!

ஈரோடு அடுத்த மூலப்பாளையத்தில் அரசு ஊழியர்களின் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாரதி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியர் தமிழ்செல்வன், வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மகும்பல் நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து, சுமார் 40 சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.

இதற்கு முன்னதாக, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரின் வீட்டில், வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை திருடியுள்ளனர்.

இதே போல் பலரின் வீடுகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கைகளில் இரும்பால் ஆன ஆயுதங்களை ஏந்திக் கொண்டு முகமூடி அணிந்து அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.