கள்ளக்குறிச்சி: பர்த்டே பார்ட்டிக்கு சென்ற பள்ளி மாணவன்; அரிவாளால் வெட்டி படுகொலை – போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கீரனூர் பகுதியை சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முந்தினம் (14.05.2022) இரவு இவரின் வீட்டிற்குச் சென்ற சகமாணவர் ஒருவர், ‘பிறந்தநாள் பார்ட்டி’ என கூறி விமலை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், இரவு முழுவதும் விமல் வீடு திரும்பவில்லையாம்.

திருக்கோவிலூர் காவல் நிலையம், படுகொலை செய்யப்பட்ட சிறுவன்

இந்த நிலையில், டி.கீரனூர் புறவழிச்சாலையின் அருகே, இளைஞர் ஒருவர் கழுத்து, கை பகுதிகளில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் அதிகாலை படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை வெட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாளும், அருகிலேயே கிடந்துள்ளது. அந்த இளைஞர் யார் என விசாரித்ததில், பள்ளி மாணவர் விமல்தான் என்பது தெரியவந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீஸார், மாணவனின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர், பிறந்தநாள் பார்ட்டியில் ஏற்பட்ட தகராறில் மாணவர் படுகொலை செய்யப்பட்டாரா?, காதல் விவகாரம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? உள்ளிட்ட பல்வேறு சந்தேக கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கள்ளக்குறிச்சி

இது குறித்து, திருக்கோவிலூர் காவல்நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசுவதற்கு முயற்சி செய்தோம். ஆனால், நமக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. பதில் அளிக்கப்படும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்கு பின் பதிவிட தயாராக உள்ளோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.