காங்கிரஸ் கட்சியில் புதிய சீர்திருத்தங்கள் குறித்து சோனியா காந்தி அறிவிப்பு..!

காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை நேற்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் காங்கிரசை சீரமைக்க அமைக்கப்பட்ட ஆறு குழுக்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி அடுத்த சில நாட்களில் 2024 மக்களவைத் தேர்தலை இலக்காக வைத்து செயலாற்ற சிறப்பு குழுவை நியமிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி, 5 ஆண்டுகளுக்கு மேல் யாரும் பதவியில் நீடிக்கக்கூடாது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார்.

காங்கிரசுக்கு ஒரு புதிய உதயம் எழும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாரத விழிப்புணர்வு பாத யாத்திரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் என்றும் சோனியா காந்தி அறிவித்தார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.