ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா| Dinamalar

புதுச்சேரி : த்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று நடைபெற்ற நரசிம்மர் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

அதனையொட்டி, காலை கோவிலில் உள்ள காரஞ்ச, ஜ்வாலா, மாலோல, பாவந, பார்கவ, சத்ரவட, அகோபில, யோக, பானக, வராக மற்றும் லட்சுமி நரசிம்மர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு, 11 நரசிம்மர்களும் அலங்கரிக்கப்பட்டு மங்கலகிரி விமானத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.