பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் கடும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்த போதும், நிலைமை சீரடையாததால், விலை தொடர்ந்து உயர்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டுறவுத் துறையின் கைத்தறி நெசவாளர்களால் நூலை கொள்முதல் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.