இலங்கையில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவால் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

கொழும்பு,
இலங்கையில் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால், பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே நிலச்சரிவும்  ஏற்பட்டுள்ளது.
இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியின் தெற்கு மாவட்டத்தில் 585 குடும்பங்களைச் சேர்ந்த 2,290 பேரும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் பேரிடர் மேலாண்மை மையத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் காற்று காரணமாக எண்பத்தி இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, ஆறுகள் மற்றும் மலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.