தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்| Dinamalar

லகுனா வூட்ஸ் : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.

கலிபோர்னியா மாகாணத்தின் லகுனா வூட்ஸ் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், நிகழ்ச்சியில் பங்கேற்றோர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஐந்து பேர் காயமடைந்தனர்.துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு, தேவாலயத்திற்கு வந்த பாதிரியார் ஜெர்ரி சென், 72, தாக்குதல் நடத்திய நபரின் தலையில் நாற்காலியை வீசி தாக்கினார்.

இதில், அவர் வலி தாங்க முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின், அங்கிருந்தோர் அவரின் கால்களை, மின்சார கம்பியால் கட்டி வைத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தெரியவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.