டெஸ்ட் கிரிக்கெட் : 99 மற்றும் 199 ரன்களில் ஆட்டமிழந்து மேத்யூஸ் பரிதாபமான சாதனை..!!

சட்டோகிராம்:
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் நிதானமாக ஆடி சதமடித்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் அவர் இன்று ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 153 ஓவரில் 397 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
இன்றைய தினம் 199 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 99 மற்றும் 199 ரன்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பரிதாபமான சாதனையை மேத்யூஸ் படைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் 99 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.