காயம் காரணமாக விலகிய சூர்யகுமார் யாதவ் : மாற்று வீரரை ஒப்பந்தம் செய்தது மும்பை அணி..!!

மும்பை,
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் தனது இடது கையின் தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் போது காயம் அடைந்த சூர்யகுமார் யாதவின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடல் தகுதி நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது. 

நடப்பு தொடரில் 12 போட்டிகளில் 9 தோல்விகளுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை அணி இழந்துவிட்டது. இருப்பினும் லீக் போட்டிகளில் மும்பை அணிக்கு 2 போட்டிகள் மீதம் உள்ளது.
இந்த 2 போட்டிகளில் சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஆகாஷ் மத்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 28 வயதாகும் ஆகாஷ் மத்வால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை, இருப்பினும் இவர் நெட் பந்துவீச்சாளராக மும்பை அணியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது மும்பை அணி இவரை ரூ.20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.