கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சடலமாக மீட்பு..!

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ராட்சத கல் சரிந்து விழுந்த விபத்தில் 300 அடி ஆழ பள்ளத்தில் கற்கள் அள்ளும் பணியில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.இதில் இருவர் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், 47-மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.