இன்று பட்டியலிடப்படும் எல்.ஐ.சி., பங்குகள் : எதிர்பார்ப்பில் புதிய முதலீட்டாளர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி :பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது.

இந்நிறுவன பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களிடம், லாபத்தை அடைய வாய்ப்பிருக்குமா என்ற கேள்வியே இன்று எழுந்து நிற்கிறது.

latest tamil news

புவிசார் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அண்மைக் காலமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவைக் கண்டு வருகின்றன. இந்நிலையில், எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டை ஒட்டி, ஏராளமான புதிய முதலீட்டாளர்கள், இந்நிறுவன பங்குகளை வாங்கியதன் வாயிலாக, சந்தைக்குள் அடி எடுத்து வைத்துள்ளனர். இவர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.எல்.ஐ.சி.,க்கு முன் மிகப் பெரிய பங்கு வெளியீடாக இருந்தது, ‘பேடிஎம்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை பொதுத்துறையைச் சேர்ந்த 21 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை பட்டியலிட்டுள்ளன.இவற்றில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள், வெளியீட்டு விலைக்கும் குறைவாகவே வர்த்தகம் ஆகின.
இந்நிலையில், எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் விலை, வெளியீட்டு விலையை விட அதிகரித்து, குறுகிய காலத்தில் லாபமீட்டி தருமா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.