நாடாளுமன்றம் இன்று கூடுகிறது! அவ்வழியே செல்லும் சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்


பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் இன்றையதினம் முதலாவது தடவையாக நாடாளுமன்றம் கூடுகின்றது. 

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது! அவ்வழியே செல்லும் சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

இதற்கமைய இன்றையதினம் முற்பகல் 10 மணியளவில நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.  

இதுவரையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் காரணமாக கொழும்பு நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.