திருச்சியில் மாவட்ட தொழில் அலுவலக மேலாளர் வீட்டில் சோதனை.. ரூ.6 லட்சம், 50 சவரன் நகைகள் பறிமுதல்.!

திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலக பொது மேலாளரின் வீட்டில் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம், 50 சவரன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் சிக்கியது. இதையடுத்து உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். மேலும் அவருக்கு சொந்தமான இரு வங்கி லாக்கர்களை சோதனையிட திட்டிமிட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.