அப்போது நோ நோ…இப்போது ஆஹா… மீரா ஜாஸ்மினின் நியூ டிரென்ட்

ஒரு காலத்தில் தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மீரா ஜாஸ்மின். 'ரன், சண்டக்கோழி' படங்களில் அவரை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அவருடைய துறுதுறு நடிப்பை ரசித்தவர்கள் பலர். முன்னணி கதாநாயகியாக இருந்த போது கொஞ்சம் கூட கிளாமர் காட்டாதவர் மீரா. 'நோ நோ' என மறுத்தவர். ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் அவருடைய கிளாமர் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் 'ஆஹா' என சொல்லி வருகிறார்கள்.

2014ல் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு சில மலையாளப் படங்களில் மட்டும் நடித்தார். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த 'மகள்' என்ற மலையாளத் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வந்த மீரா தொடர்ந்து பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.

இப்போது மீராவிற்கு எப்படியும் 40 வயதாவது ஆகியிருக்கும். இந்த வயதில் அவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதில் அர்த்தமில்லை என திரையுலகிலேயே கிசுகிசுக்கிறார்கள். இளம் நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பில்லை. அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் வேண்டுமானால் நடிக்க அழைப்பார்கள். ஆனால், அதிலெல்லாம் மீரா நிச்சயம் நடிக்க மாட்டார் என்கிறார்கள். ஏதோ அவரது திருப்திக்காக இப்படி கிளாமர் புகைப்படங்களை பதிவிடுகிறாரோ என்றும் கேட்கிறார்கள். அது மீராவுக்கே வெளிச்சம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.