”கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாரா கலந்துகொள்கிறாரா?” – உண்மை என்ன?

”கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தியா சார்பில் நயன்தாரா கலந்துகொள்வார்” என்று வெளியான தகவலில் உண்மை இல்லை கூறப்படுகிறது.

பிரான்ஸில் இன்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இதில், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்சய் குமார், சேகர் கபூர் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதுதவிர நடிகை நயன்தாராவும் கலந்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலில் உண்மை இல்லை என்று சொல்லப்படுகிறது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

image

இதனால், திருமண வேலைகளில் இருவரும் ஈடுப்பட்டுள்ளனர். அதனால், நயன்தாரா கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொள்கிறார் என்ற செய்தி பொய்யானது என கூறுகின்றனர். ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெற்றியை கொண்டாடி வரும் இந்த ஜோடி விரைவில் திருமணக் கொண்டாட்டத்திலும் இணைகின்றனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில், நடிகர் மாதவன் முதல் முதலாக இயக்கிய ’ராக்கெட்ரி: த நம்பி எஃப்கெட்’ வரும் 19 ஆம் தேதி ஒளிபரப்பப்படவுள்ளது. அப்போது, மாதவனுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதேபோல, இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிறது. பா.ரஞ்சித் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.