திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக்!

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து,
திருப்பதி
ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், குறைந்த அளவிலேயே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
விஐபி பிரேக் தரிசனம்
ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யபப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
தெரிவித்துள்ளது. இதனால், கூடுதலாக சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அலிபிரியில் இருக்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2ஆவது சத்திரம் ஆகிய 3 இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை வெயிலை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், மோர், சிற்றுண்டி, உணவு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோடை வெயிலுக்கு மாட வீதிகளில் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.