புதுச்சேரிக்கு லாரியில் கடத்திச்செல்லப்பட்ட 20 லிட்டர் அளவிலான எரிசாராயம் பறிமுதல்!

டெல்லியில் இருந்து புதுச்சேரியை நோக்கி லாரியில் கடத்திச்செல்லப்பட்ட சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயத்தை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் புதுப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியை, மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.

அதிகாரிகள் வருவதையறிந்த லாரி ஓட்டுநர், பயத்தில் வேகமாக சென்று லாரியை சாலையோரம் இருந்த மரத்தின் கீழ் நிறுத்திவிட்டு மலைப்பாங்கான பகுதி வழியே தப்பியோடியுள்ளான்.

அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.