சொத்துக்களை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதி

கடந்த நாட்களில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதம் அடைந்துள்ளன.

வன்முறைகளினால் வீடு மற்றும் சொத்துக்களை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதல் பணி என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த வன்முறைச் செயற்பாடுகளை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் அரசாங்க பிரதம கொறடாவாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.