சாலையில் அமர்ந்து கெத்து காட்ட முயன்ற இளைஞர்கள் – கொத்தாக அள்ளிச் சென்ற போலீசார்!

போலீசாரின் வாகன சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் உட்கார்ந்து கெத்து காட்டிய பசங்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வலதெரு பகுதியை சேர்ந்த 12 இளைஞர்கள், திடீரென காரைக்கால் முக்கிய சாலையான பாரதியார் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பொது மக்களுக்கு கடும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அமர்ந்திருந்தனர்.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த காரைக்கால் நகர போலீசார் மறியலில் ஈடுபட்ட பசங்களிடம் விபரம் கேட்டதற்கு, எங்கள் பகுதியில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவதாகவும், இதற்கு தங்களது கெத்தை காட்டுவதற்காக தாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
image
இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்ததில், அப்பகுதியை சேர்ந்த சேதுபதி, கார்த்திக், ஆஷிக், விஜய், பரமசிவன், சாணக்கியன், ஹரிஹரன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பசங்களை தேடிவருகின்றனர்.  போலீசாரின் வாகன சோதனைக்கு எதிராக நகரின் முக்கிய சாலையை மறித்து உட்கார்ந்து கெத்து காட்டிய பசங்களின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.