கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி.. காவல்துறையினர் விசாரணை..!

மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கட்டுபடி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

 தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்

 அந்த பெண்மணி யார் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.