எரிவாயுக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இன்று (18) இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய,3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும் மற்றொரு கப்பல் நாளைய தினம்  நாட்டை வந்தடையவுள்ளதாகவும்,  இரண்டு கப்பல்களுக்கும் பணம் இன்று செலுத்தப்படும் என்றும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல் (18) தினந்தோறும் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

K.Sayanthiny

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.