‛ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகுகிறாரா அர்ச்சனா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் அந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ஆல்யா மானசா, பிரசவத்தின் காரணமாக வெளியேறிய நிலையில், ரியா விஸ்வநாத் என்ற புது நடிகை நடித்து வந்தார். அவரும் தனது நடிப்புத் திறமையால் மக்களின் மனதில் இடம் பிடித்து சந்தியா கதாபாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த தொடரில் கதாநாயகிக்கு இணையாக மிகவும் பிரபலமான கதாபாத்திரம் என்றால் அது வில்லி அர்ச்சனாவின் கதாபாத்திரம் தான்.

இந்த கதாபாத்திரத்தில் வீஜே அர்ச்சனா நடித்து காமெடியிலும் வில்லத்தனத்திலும் கலக்கி வந்தார். பாரதி கண்ணம்மா பரீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகமாக ரசிகர்களிடம் திட்டு வாங்கிய வில்லி நடிகை அர்ச்சனா தான். சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் கூட அர்ச்சனாவின் நடிப்பை பாராட்டி விருது வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், அர்ச்சனா தற்போது ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அர்ச்சனா தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.