“பேரறிவாளன் விடுதலை” – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளன், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. அதாவது, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, “பேரறிவாளனை விடுவிப்பதே வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு. வழக்கின் நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது. இந்த வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? எந்த விதியின் கீழ் மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகிறீர்கள்? கிரிமினல் வழக்குதானே, கிரிமினல் வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா?

உச்ச நீதிமன்றம்

கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தானே ஆளுநர்” என மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும் இந்த வழக்கில், `உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தினால் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும்’ என பேரறிவாளன் தரப்பு கூறியிருந்தது. கடந்த 11-ம் தேதியோடு அனைத்து வாதங்கள் முடிவடைந்தன. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னதாக அறிவித்திருந்தபடியே, பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது.

இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “இந்த வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியது தவறு” என்று கூறியதுடன் அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.