ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணிக்கு ஜாமின்| Dinamalar

புதுடில்லி: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்பட்ட தனியார் ‘டிவி’ சேனலின் உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா வாயிலாக பிறந்த மகள் ஷீனா போராவை, 2012ல் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரும், அவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியும், 2015ல் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும்போதே இருவரும் 2019ல் விவாகரத்து பெற்றனர். ஷீனா போரா கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் இந்திராணிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.