பேரறிவாளன் விடுதலை எனக்கு கிடைத்த வெற்றி- தாயார் அற்புதம்மாள் உருக்கம்

ஜோலார்பேட்டை:

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியவில்லை என கூறி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். எனது மகன் பேரறிவாளன் விடுதலையானது எனக்கு கிடைத்த வெற்றி. இது என்னுடையதல்ல எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் நன்றி என்று கூறினார்.

பேட்டியை முடித்ததும் பேரறிவாளன் பறை கொட்டி தனது மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.