அடித்து ஓடும் வெள்ளம்..அசராமல் நின்று மீன்பிடித்த முதியவர்…இணையத்தில் வைரல்.!

கேரளாவில், கரைபுரண்டோடும் வெள்ளத்தில் இறங்கி ஒரு நபர் ஆபத்தான முறையில் மீன் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அம்மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சாளியார் ஆற்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில், அதில் இறங்கி அமீர் என்ற நபர் வலையை விரித்து மீன்பிடித்துள்ளார்.

இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாமென அதிகாரிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.