Morbi Factory Accident: தொழிற்சாலையில் இடிந்து விழுந்த சுவர் – 12 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில், தொழிற்சாலை ஒன்றில், சுவர் இடிந்து விழுந்த விபத்தில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள ஒரு உப்பு தொழிற்சாலை ஒன்றில், சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சாக்கு மூட்டைகளில் உப்பு நிரப்பும் பணி நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 20 முதல் 30 தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அவர்களில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீட்புக் குழுவினர் அனுமதித்து உள்ளனர்.

தொழிலாளர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடைய குடும்பத்தாருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். மேலும், சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் விரைவு பணிகளை துரிதபடுத்தும்படி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.