சினிமா பிரபலங்கள், உறவினர்கள்… எளிமையாய் நடந்து முடிந்த ஆதி – நிக்கி கல்ராணி திருமணம்!

`நீ கவிதைகளா… கனவுகளா’ என `மரகதநாணயம்’ படத்தில் வருகிற பாடலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்தப் படத்தில் ஜோடியாக நடித்திருந்த ஆதியும், நிக்கி கல்ராணியும் நிஜத்திலும் காதலர்கள். சமீபத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ஆதி – நிக்கி

தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆதி. துறுதுறுவென தன் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நிக்கி. இவர்கள் இருவரும் ரியல் ஜோடியான வைபவம் தற்போது நடைபெற்றிருக்கிறது. எளிமையான முறையில் இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் இன்று நடைபெற்றிருக்கிறது.

நண்பர்களாக பழக ஆரம்பித்து பிறகு காதலர்களாகி, இன்று இல்லற வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். ‘இவர்கள் காதலிக்கிறார்கள்’ எனப் பரவிய வதந்திக்கு இவர்கள் முற்றுப்புள்ளியே வைக்கவில்லை. தொடர்ந்து பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதும், குடும்ப நிகழ்வுகளில் இவர்களுடைய பங்களிப்பும் இவர்கள் நிச்சயம் காதலர்கள்தான் என்று கிசுகிசுக்க வைத்தது. அதை அவர்களும் மறுக்கவில்லை. நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பதிவிட்டு தங்களுடைய வாழ்க்கையில் அடுத்தக்கட்டம் குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

ஆதி – நிக்கி

திரை பிரபலங்கள், நண்பர்கள் எனப் பலரும் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டு இவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் நிக்கி – ஆதி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.