திருவள்ளூர்: 100 நாள் பணியின் போது 15ம் நூற்றாண்டு கால மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு!

திருவள்ளூர் அருகே 100 நாள் பணியின் போது 15-ஆம் நூற்றாண்டு கால அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே கலியனூர் கிராமத்தில் கைலாசநாதர் கோயில் குளத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் வேலை செய்த போது கடப்பாரையால் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது, சிலை ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை வெளியில் எடுத்து பார்த்ததில் அம்மன் சிலை என தெரியவந்தது. இது குறித்து கோயில் நிர்வாகி லட்சுமணனிடம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
image
இதனையடுத்து கோயில் நிர்வாகி லட்சுமணன் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வட்டாட்சியர் வருவதற்குள் கிராம மக்கள் அந்த கற்சிலை அம்மன் சிலையை எடுத்து மஞ்சள், குங்குமம் பூசி கற்பூரம் ஏற்றி வழிபட தொடங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் பழங்கால அம்மன் கற்சிலையை ஆய்வு செய்தார்.
image
இந்த சிலை 14 அல்லது15-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், ஸ்ரீதேவியின் மூத்த சகோதரி மூத்ததேவியின் சிலை என்றும்பல்லவர்கள் காலத்தில் செல்வத்திற்காகவும் வளத்திற்காகவும் நீர்நிலைகளில் வைத்து வழிபட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் தமிழகத்தில் பல்வேறு போன்ற இடங்களில் வைத்து வழிபாடு செய்திருப்பதாகவும் தெரிவித்ததோடு மூத்ததேவியின் கையில் இருப்பது மகன் மாந்தன், மகள் மாந்தி என்றும் பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது ஸ்ரீதேவிக்கு முன் வந்ததால் மூத்த தேவி என்ற அழைப்பதுண்டு என்றும், பல்லவர்கள் கால தமிழர்கள் வணங்கிய தெய்வம் என்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.