அதிரடியாக ஆடிய குவின்டன் டி காக்- கொல்கத்தாவுக்கு 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை டாக்டர் டிஒய் பாட்டில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனால், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக குவின்டன் டி காக் 70 பந்துகளில் பத்து 6, 10 பவுண்டரிகள் எடுத்து 140 ரன்களை விளாசினார். கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார்.

 

இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள்..
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- ஸ்ரீகாந்த் 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.