மத்திய, மாநில அரசுகளுக்கு முஸ்லிம் வாரியம் கோரிக்கை

லக்னோ : ‘முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து, தங்கள் நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்’ என, மத்திய, மாநில அரசுகளுக்கு முஸ்லிம் தனி சட்ட வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் தலைநகர், லக்னோவில், முஸ்லிம் தனி சட்ட வாரிய உறுப்பினர் காசிம் ரசூல் இல்யாஸ் கூறியதாவது:
நாட்டில் முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது, குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இது நேரடி தாக்குதலாக இல்லாமல், நீதிமன்றங்கள் வாயிலாக நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது. இதில், தங்கள் நிலையை மத்திய, மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்களில் பிரச்னையை ஏற்படுத்தி, நாட்டின் ஒற்றுமையை சீரழிக்க, சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை கண்டித்து, நாடு முழுதும் போராட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.