டில்லியில் 3 மாநகராட்சிகளும் 22ல் இணைப்பு| Dinamalar

புதுடில்லி : டில்லி மாநகராட்சி, 2011ல், தெற்கு, வடக்கு, கிழக்கு என, மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. ஆனால், வார்டுகள் சரியாக பிரிக்கப்படாதது, வருவாயில் ஏற்ற, தாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், மூன்று மாநகராட்சிகளிலும் பணிகள் சரியாக நடக்கவில்லை.இதையடுத்து, மூன்று மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான மசோதா, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”டில்லியின் மூன்று மாநகராட்சிகளும் 22ம் தேதி முறைப்படி இணைக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.