தலவாக்கலையில் மண்சரிவு

மத்திய மலையகப் பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19) காலை தொடர் குடியிருப்புகள் தொகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு குடியிருப்புகள் சேதமடைந்தன.

வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க பொருட்களும் மண் மேட்டில் புதைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு, நுவரெலியா பிரதேச செயலகம்‌ மற்றும் தலவாக்கலை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.