சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண் மதபோதகர் மரியம் செல்வம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த பேராயர் காட்பரே நோபுள் அளித்த புகாரின் பேரில் பணமோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிரியர்களை குறிவைத்து அவரது மகன்களுக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.