மட்டக்களப்பு மங்களகம பிரதேசத்தில், காணி மத்தியஸ்தம் ஊடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டம்

US AID மற்றும் GLOBAL COMMUNITIES நிறுவனத்தின் நிதி அனுசரணையில், LIFT நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காணி மத்தியஸ்தம் ஊடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் எனும் செயற்பாட்டில் காணிப்பிணக்குகளுக்கான விசேட மத்தியஸ்த முயற்சிகள் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மங்களகம பிரதேசத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் தவிசாளர் க.குருநாதன், உதவி தவிசாளர் என்.இளஞ்செழியன் மற்றும் காணி மத்தியஸ்த சபையின் உறுப்பினர் ஏ.வீ.எம்.முஸ்தபா ஆகியோரின் வழிகாட்டலில்  செயற்திட்டம் இடம்பெற்றது.

பெறப்பட்ட 35 பிணக்குகளுக்கான விசாரணைகள் இடம்பெற்று சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.