நவஜோத் சித்து இன்று பாட்டியாலா காவல்நிலையத்தில் சரண்.. ஓராண்டு சிறைத்தண்டனையை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு..!

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் இன்று பிற்பகல் பாட்டியாலா காவல் நிலையத்தில் சரண் அடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்று தண்டனையை ரத்து செய்யக் கோரி சித்து சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு சாலையில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் சித்து குர்னாம் சிங் என்பவரின் தலையில் கையால் ஓங்கி அடித்ததால் அந்த நபர் காயம் அடைந்து பின்னர் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் சித்துவை குற்றவாளி என்று தீர்ப்பளித்து உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.