மீண்டும் கேங்ஸ்டர் கதையை படமாக்கும் பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே ரஜினி நடித்த காலா, கபாலி படங்களில் கேங்ஸ்டர் கதையை படமாக்கிறார். இடையில் குத்துச் சண்டை பற்றிய சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய அவர், அடுத்ததாக கமலுடன் இணைந்து மதுரையை கதை களமாக கொண்ட கேங்ஸ்டர் படம் இயக்குகிறார். இதில் கமல் நடிக்கிறார். இதுதவிர விக்ரம் நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இதற்கு இடையில் மற்றுமொரு கேங்ஸ்டர் கதையை படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். படத்தின் தலைப்பு வேட்டுவம். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோவுடன் இணைந்து கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள். படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.