பிறந்தநாளை கொண்டாட சுற்றுலா கிளம்பிய நடிகை

விஜய் டிவியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்யாமந்தா கிரண். தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பயணம் செய்வதில் அதிக ஆர்வமுள்ள ஸ்யாமந்தா கிரண் பெட்டி படுக்கையை பேக் செய்து கொண்டு தற்போது ஊர் சுற்ற கிளம்பிவிட்டார். சென்னை ஏர்போர்ட்டில் சூட்கேஸூடன் போஸ் கொடுத்துள்ள கிரண், 'உலகை சுற்ற எனக்கு வேண்டியதெல்லாம் சூட்கேஸ், பாஸ்போர்ட் தான்' என கூறி பிறந்தநாளை கொண்டாட சுற்றுலா செல்கிறேன் என தெரிவித்துள்ளார். தற்போதெல்லாம் சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செல்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில், அந்த லிஸ்ட்டில் இவரும் இணைந்து விட்டாரா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.