அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? அவரே கூறிய பாரிய தகவல்


ஐபிஎல் 2023-ல் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து எம்எஸ் தோனி பாரிய தகவலை அளித்துள்ளார்.

ஐபிஎல் 2022 சீசனின் இறுதிப்போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக விளையாடியது. ஆனால் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட ஒரே விடயம், எம்எஸ் தோனி அடுத்த சீசனில் ஒரு வீரராக சிஎஸ்கே ஜெர்சியில் காணப்படுவாரா இல்லையா என்பதுதான்.

தோனி ராஜஸ்தானுக்கு எதிரான டாஸ் வென்ற பிறகு, சீசன் பற்றிய வழக்கமான கேள்விகளுக்கு பதிலளித்தபோது, தோனியிடம் அவரது எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டது.

தோனி தனது சொந்த பாணியில், அடுத்த சீசனில் திரும்புவதற்கு கடுமையாக உழைப்பேன் என்று கூறினார்.

அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? அவரே கூறிய பாரிய தகவல்

எம்.எஸ். தோனி பேசுகையில், “கண்டிப்பாக, இதற்கு ஒரே ஒரு எளிய காரணம் தான் இருக்கிறது. சென்னையில் விளையாடாமல், நன்றி சொல்லாமல் விடைபெறுவது நியாயம் இல்லை” என்று டாஸ்ஸில் தோனி கூறினார்.

எம்.எஸ். தோனி இதுவரை CSK அணியை 4 முறை வெற்றிபெற வழிநடத்தியுள்ளார்.

அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? அவரே கூறிய பாரிய தகவல்

ஆகஸ்ட் 15, 2020 அன்று தனது சர்வதேச ஓய்வை அறிவித்ததில் இருந்து அவர் விளையாடும் ஒரே கிரிக்கெட் போட்டி ஐபிஎல் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி கடந்த சீசனில் சிஎஸ்கே பட்டத்தை வென்றார், ஆனால் ஐபிஎல் 2022 தொடங்குவதற்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவிடம் தலைமையை ஒப்படைக்க முடிவு செய்தார். சிஎஸ்கே கேப்டனாக ஜடேஜா சற்று சொதப்பியதாக தோன்றியதையடுத்து, மீண்டும் பொறுப்பை எம்.எஸ்.தொனியிடமே ஒப்படைத்தார்.

அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? அவரே கூறிய பாரிய தகவல்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.