இந்திய வம்சாவளி மீது ரூ.9 கோடி மோசடி வழக்கு| Dinamalar

சிங்கப்பூர், மே 21-
சிங்கப்பூரில், 9 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மீது, 21 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், முரளிதரன் முகுந்தன். இவர், ஊய் பாய்க் செங் என்ற சீன வம்சாவளி பெண்ணிடமும், மாரிமுத்து என்ற இந்திய வம்சாவளியிடமும் 9 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், முரளிதரன் முகுந்தன் மீது போலீசார், 21 குற்றப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றங்களுக்கு முரளிதரனுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் கிடைக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.