தமிழகத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
எனவே இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சண்முகம் தெரு, தாயகம் தெரு, வெள்ளாளர் காலனி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.