காட்டுப்பன்றிக்கு வைத்த மின்பொறி: போலீசார் இருவர் பலி| Dinamalar

பாலக்காடு: பாலக்காடு அருகே மின்சாரம் தாக்கி, இரு போலீசார் பலியான சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, ஆயுதப்படை போலீசார் அசோக்குமார் 35, மோகன்தாஸ் 36, ஆகியோர், காட்டு பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இறந்தனர். மின்பொறி வைத்த சுரேஷ், 49, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மாவட்ட எஸ்.பி., விஸ்வநாதன் கூறுகையில், ”காட்டு பன்றிகளை பிடிக்க, சுரேஷ் அடிக்கடி மின்பொறி வைப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு, 10.30 மணிக்கு வீட்டில் இருந்து மின் வயர் இணைத்து, இவர் அருகில் உள்ள தோட்டத்தில் மின்பொறி வைத்துள்ளார். அவ்வழியாக சென்ற போலீசார் இருவரும் மின்பொறியில் சிக்கியுள்ளனர். இவர் மீது ஏற்கனவே, காட்டுப் பன்றிகளை வேட்டையாடியதாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.