பாலக்காடு: பாலக்காடு அருகே மின்சாரம் தாக்கி, இரு போலீசார் பலியான சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே, ஆயுதப்படை போலீசார் அசோக்குமார் 35, மோகன்தாஸ் 36, ஆகியோர், காட்டு பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இறந்தனர். மின்பொறி வைத்த சுரேஷ், 49, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மாவட்ட எஸ்.பி., விஸ்வநாதன் கூறுகையில், ”காட்டு பன்றிகளை பிடிக்க, சுரேஷ் அடிக்கடி மின்பொறி வைப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு, 10.30 மணிக்கு வீட்டில் இருந்து மின் வயர் இணைத்து, இவர் அருகில் உள்ள தோட்டத்தில் மின்பொறி வைத்துள்ளார். அவ்வழியாக சென்ற போலீசார் இருவரும் மின்பொறியில் சிக்கியுள்ளனர். இவர் மீது ஏற்கனவே, காட்டுப் பன்றிகளை வேட்டையாடியதாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்,” என்றார்.
பாலக்காடு: பாலக்காடு அருகே மின்சாரம் தாக்கி, இரு போலீசார் பலியான சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே, ஆயுதப்படை போலீசார் அசோக்குமார் 35, மோகன்தாஸ் 36,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.