#BigBreaking || நடப்பு ஆண்டு முன்கூட்டியே…, சற்றுமுன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறப்பது வழக்கம்.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 46,000 கன அடி தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115 அடியாக  உயர்ந்திருக்கிறது. 

நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் அடுத்த இரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உழவர்கள் ஆயத்தமாகி விட்டதால், ஜூன் 12-ஆம் தேதி வரை காத்திருக்காமல் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று, முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.