மீதமுள்ள ராஜீவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

குன்னூர்: ராஜீவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

3நாள் பயணமாக ஊட்டியில் முகாமிட்டுளள பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ராஜீவ்கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக  விசாரணைநடைபெற்ற நிலையில், இறுதியில், உச்சநீதிமன்றம், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து  தீர்ப்பளித்தது. இதையடுத்து, மற்ற குற்றவாளிகள் 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அமைச்சர் துரைமுருகன், ரகுபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.