பார்லி., புதிய கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து| Dinamalar

புதுடில்லி : பார்லி., புதிய கட்டடம் கட்டும் இடத்தில் நேற்றும் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.தலைநகர் டில்லியின் மத்திய பகுதியில், பார்லி.,க்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகி. நேற்று மதியம் இங்கு சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர். ஆனால், அதற்கு முன்பே பார்லி., வளாக தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து விட்டனர். இங்கு, கடந்த 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு, தொழிலாளர்களின் மூன்று கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.