ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டு வந்தசுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. ஜம்மு – காஷ்மீரிலிருக்கும் ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கட்டப்படுகிறது. இதில், 19ம் தேதி இரவு, தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, சுரங்கப் பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 13 தொழிலாளர்கள் சிக்கினர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடி, படுகாயம் அடைந்த நிலையில் இருந்த மூன்று பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இடிபாடுகளில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். ஒன்பது பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இந்நிலையில், நேற்று மேலும் ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.
ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டு வந்தசுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. ஜம்மு – காஷ்மீரிலிருக்கும் ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு – ஸ்ரீநகர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.