ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரு சிறுவர்கள்: சகதியில் கால்கள் சிக்கியதால் நேர்ந்த பரிதாபம்!

ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மகன் உதயகுமார் (11) மற்றும் பிரபாகரன் (9) ஆகிய இருவரும் இருணாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எகிலி ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மீன்பிடிப்பதற்காக ஏரியில் இறங்கிய இருவரும் சகதியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.
image
இதனைக் கண்ட பொதுமக்கள் விரைந்து வந்து தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் நீரில் மூழ்கியதால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் இரு சிறுவர்களின் உடலையும் மீட்டனர்.
இதையடுத்து இரு சிறுவர்களின் உடலையும் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள்இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து இருவரின் சடலங்களும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
image
இச்சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.