உலகின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும்: ராஜ்நாத் சிங்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நாக்பூர்: உலகின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

latest tamil news

இந்தியாவிலிருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் அதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.


இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

latest tamil news

அதிகாரிகளிடம் பேசிய ராஜ்நாத்சிங், ‘ பாதுகாப்புத்துறையில் நமது தொழிற்துறை அளித்து வரும் பங்களிப்பின் காரணமாக நாளுக்கு நாள் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. விரைவில் இந்தியா உலகின் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மையமாக திகழும்’ இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.