மாநிலங்களுக்கான வரிபங்கு குறைக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மாநிலங்களுக்கான வரிப்பங்கு குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

latest tamil news

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்தது. இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 8ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 6ம் கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 9.50ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 7ம் குறைந்துள்ளது.

latest tamil news

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (மே 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலங்களுக்கான வரிப்பங்கு குறைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பில் மத்திய அரசே தனது வருவாயை விட்டுக் கொடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பால் மத்திய அரசுக்கு ரூ 1 லட்சம் கோடி வருவாய் குறையும்’ என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.