தனியார் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு செய்திகளை வார இதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது.!

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு செய்திகளை வார இதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனத்தை சேர்ந்த புருஷோத்தமன்குமார் என்பவர், கெவின் என்பவர் பொய்யான ஆதாரமற்ற கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிடாமல் இருக்க தங்களது நிறுவன இயக்குநரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்தார்.

அதன் பேரில் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கெவினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.